பந்திங்கில் சிதைந்த நிலையில் உடல்! - காதலன் கைது

top-news
FREE WEBSITE AD

காஜாங், டிச 31: பந்திங்கில் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் 15 வயது சிறுமி காணாமல் போன சம்பவத்துடன் இது  சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.

நேற்று சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறிய சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

இதனை அடுத்து பந்திங் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தற்போது, ​​16, 20 மற்றும் 51 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஜனவரி 5 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவரின் காதலனும் அடக்கம் என்று அவர் கூறினார்.

உடலின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனையின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக இன்று ஓர் அறிக்கையில் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *