இனி அனைத்து மால்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்! - தேசிய போலீஸ் படைத் தலைவர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 9: ஷா ஆலம்,  செத்தியா ஆலமில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்களில் துணை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு காவலர்களை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய  காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

 சிலாங்கூர் போலீசார் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், பல்வேறு போலீஸ் பிரிவுகள் அவர் இருக்கும் இடத்தை கண்காணித்து வருவதாகவும், அண்டை மாநிலங்களில் உள்ள போலீசார் மற்றும் எல்லை அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரசாருதீன் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஊகத்தையும் அவர்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்  என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *