மானிய விலை எண்ணெய் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனைகள் விதித்தால் கடும் நடவடிக்கை! - வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், செப் 24: 1 கிலோ பாலிபேக்கில் விற்கப்படும் மானிய விலையில் சமையல் எண்ணெயை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்று பினாங்கு வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பினாங்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் இயக்குனர் எஸ் ஜெகன் ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். தவறான வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க  தயங்க மாட்டோம் என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் மானிய விலையில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவரது இந்த அறிக்கை வந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பொருட்களை விற்பனை செய்ய நிபந்தனைகளை விதிக்கும் வியாபாரிகளிடமிருந்து ஐந்து புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜெகன், இதுபோன்ற சிக்கல்களைச் சந்திப்பவர்கள்  தங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டும் என்றும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *