நெகிரி செம்பிலான் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

(நாகேந்திரன் வேலாயுதம்)

செண்டாயான், ஜூன் 27-

மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்து பல்லின மாணவர்களிடயே மலேசியர் என்ற உணர்வோடு பங்கேற்கும் சதுரங்கப் போட்டி சிறப்பாக நடைபெற்றது என அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் தர்மராஜ் சுப்பிரமணியம் கூறினார்.

அவரின் தலைமையிலான நெகிரி செம்பிலான் ஒருங்கிணைப்பு மேம்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் இங்கு பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், நாடு தழுவிய நிலையில் தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, தேசியப்பள்ளி ஆகிய பள்ளிகளை பிரதிநிதித்து சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கெடுத்தனர்.




மேலும் இப்போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது. குறிப்பாக ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 12 வயதுக்கு கீழ் பிரிவிலும், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு கீழ் பிரிவிலும் பங்கேற்றனர் என்று தர்மராஜ் தெரிவித்தார்.இப்போட்டி தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் சமூக வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்வேறு இனங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களை மையப்படுத்தி, இந்த விளையாட்டு மூலம் ஒன்றிணைத்தது என அவர் சுட்டிக்காட்டினார்.

மாவட்டம் அல்லது மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு, இரண்டாவது வாய்ப்பை வழங்குவதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும்.மாவட்ட அல்லது மாநில அளவில் வெற்றிபெறாத மாணவர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்தப் போட்டி வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இப்போட்டியை நெகிரி செம்பிலான் கல்வி இயக்குநர் கலிடா ஹாஜி ஒமார் நிறைவு செய்துவைத்தார், உடன் டத்தோ சதீஸ்குமார் மனோகரன் கலந்து சிறப்பித்தார்.

மாநில கல்வி இலாகா, இளைஞர் விளையாட்டுத் துறை, விளையாட்டு பேரவை மற்றும் சுகாதாரத் துறை ஆகிய அரசு துறைகளின் ஒத்துழைப்புடனும், இப்போட்டி லின்சம் இன்ஜினியரிங் நிறுவனத்தின் ஆதரவோடும் நடைபெற்றது.

Pertandingan catur anjuran Persatuan Pembangunan Negeri Sembilan berjaya menyatukan 450 murid pelbagai kaum, memupuk semangat perpaduan nasional. Acara ini memberi peluang kedua kepada murid yang tidak berjaya di peringkat daerah dan negeri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *