எரிசக்தி மாற்றத்தை ஊக்குவிக்கும் வட்டார ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்!

- Muthu Kumar
- 27 May, 2025
கோலாலம்பூர், மே 27-
பருவநிலை இலக்கு, அதிகரிக்கும் எரிசக்தி தேவைக்கு ஏற்ப நியாயமான, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய எரிசக்தி மாற்றத்தை ஊக்குவிக்கும் வட்டார ஒத்துழைப்பை உறுப்பு நாடுகள் மேம்படுத்த வேண்டும் என்று ஆசியானுக்கு தலைமையேற்றிருக்கும் மலேசியா வலியுறுத்துகிறது.
இவ்வட்டாரத்தில் ஒற்றுமை, நடைமுறை கட்டமைப்பு மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்சக்தியின் எதிர்காலம் நிறுவப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு ஆசியான் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மலேசியா, உரையாடலை ஊக்குவிப்பதற்கும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்கும் வட்டார கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் முழுமையாக உறுதிபூண்டுள்ளது."என்றார் அவர்.நேற்று, கோலாலம்பூரில் நடைபெற்ற மைடிஜிட்டல் ஏற்பாட்டிலான ஆசியான் எரிசக்தி மாற்றம், வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எனும் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப், அவ்வாறு கூறினார்.
ஆசியானில் எரிசக்தி தேவை ஆண்டுக்கு மூன்று விழுக்காடு விகிதம் என்ற அடிப்படையில் உலக சராசரியை விட வேகமாக அதிகரித்து வருகிறது.ஆகவே, 2040ஆம் ஆண்டுக்குள் 60 விழுக் காட்டிற்கும் மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான ஃபடில்லா சுட்டிக்காட்டினார்.
Malaysia sebagai pengerusi ASEAN menekankan kerjasama serantau bagi peralihan tenaga yang adil dan selamat, sejajar dengan matlamat iklim serta keperluan tenaga meningkat. Fadillah Yusof menggesa struktur kerjasama kukuh demi masa depan tenaga bersih dan mampan menjelang 2040.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *