இன விவகாரக் கூறுகளை நிராகரிப்பீர்- மக்களுக்கு வான் அசிசா வலியுறுத்தல்!

- Muthu Kumar
- 11 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 11-
இன விவகாரங்கள் மூலம் தங்களைக் கவர முயலும் எந்த ஒரு தீய சக்தியையும் முற்றாக நிராகரிக்குமாறு. நாட்டு மக்கள் அனைவரையும், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.
சிறு கருத்து வேறுபாடுகளைப் பெரிதாக்குவதற்குப் பதிலாக பொதுவான நிலையைக் கண்டறிவதன் மூலம்,கருத்து மற்றும் நம்பிக்கை வேறுபாடுகளை எதிர்கொள்வதில் நாட்டு மக்கள் இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்று, பிரதமரின் துணைவியாருமான டாக்டர் வான் அசிசா கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது அடையப்பட்டுள்ள நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கம், எதிர்கால சந்ததியினருக்காக தொடர்ந்து நிலைத்திருக்க, நல்ல முறையில் கட்டிக் காக்கப்படுவது கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்ததை “நாம் அனைவரும்
அறிந்திருப்பதுபோல், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கொள்கை நீண்ட காலமாக மலேசிய சமூகத்தின் நல்லிணக்கத்தின் மையமாக விளங்கி வருகிறது.
"வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களின் சிறப்புக்கள் ஒருபோதும் பிளவுபட்டதில்லை.மாறாக, அது நம் அனைவருக்கும் இடையிலான உறவை பலப்படுத்துகிறது."எனவே, இந்த ஒற்றுமையின் பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாப்போம் என்றும் சமூகத்தில் நல்வாழ்வின் மதிப்பை வலியுறுத்தும் மலேசியாவின் மடானி கொள்கையின்படி. நட்பையும் குடும்ப உணர்வையும் வலுப்படுத்த இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக அமைந்தது என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் நீச்சல் வளாகத்தில் உள்ள பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற அளவில் நேற்று சனிக்கிழமை நடந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றும்போது டாக்டர் வான் அசிசா இதனைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *