5 நாட்களாக விமான விபத்தில் பலியானவர்களின் உடலை பெற ஆம்புலன்சுடன் காத்திருக்கும் உறவினர்கள்!

top-news
FREE WEBSITE AD

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்டு சென்ற 'ஏஐ 171'போயிங் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், அகமதாபாத்தில் நேரிட்ட ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. பலியானவர்களின் உடல்களில் மரபணு சோதனை நடத்தப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பலியானவர்களின் குடும்பத்தினர், அவர்களின் உடலை பெற்றுச்செல்வதற்காக, விபத்து நடந்த ஜூன் 12ம் தேதி முதலே மருத்துவமனையில் காத்து கிடக்கின்றனர். அவர்களிடம், மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில், சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் கிடக்கின்றன. இதனால், உடல்களை பெற முடியாத நிலையில் உள்ள உறவினர்கள், தவித்து வருகின்றனர். உடலை பெறுவதற்காக கடந்த 5 நாட்களாக அவர்களின் உறவினர்கள் ஆம்புலன்ஸுடன் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல் , "பலியானோரில் 125 பேரில் 124 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 83 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன" மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி "பலியானோரின் உறவினர்கள் யாரும் பீதியடைய வேண்டாம். டிஎன்ஏ சோதனையால் தாமதம் ஆகிறது. இன்று இரவு அல்லது நாளை புதன்கிழமை காலைக்குள் அனைவரின் உடல்களும் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *