முறையான உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை! – இருவர் கைது

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜன 23: மூவாரில் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் அரை மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத பட்டாசுகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில், ஜாலான் பக்ரி, மூவாரில் உள்ள வளாகத்தில் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

முறையான உரிமம் இல்லாமல் வெடிபொருட்களை வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

RM503,665 மதிப்புள்ள 319 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், மெர்சிங்கில், செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் சுமார் RM3,000 மதிப்புள்ள பட்டாசுகளை வைத்திருந்ததற்காக 24 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *