பி.எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, டிச. 20-

கடந்த 14 டிசம்பர் 2024.சனிக்கிழமையன்று மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு ஒன்று சிறப்பாக நடைபெற்றது. பி.டி.என்.கே கல்வியகத்தின் இயக்குநர் நவகணேஷ் மாணிக்கம், பி.எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

இந்த கருத்தரங்கில் மலாய் மொழி, வரலாறு மற்றும் கணிதப் பாடங்களில் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறுவதற்கான யுக்திகளை முன்னணி ஆசிரியர்களான முகமது சவிசான் பின் அஹமாட், புகுனேஸ்வரி, முருகன் ஆகியோர் மாணவர்களிடம் பகிர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், ஜொகூர் மாநில கல்வி இலாகாவின் பாலர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள் துணை இயக்குநர் இரவிச்சந்திரன் இராமகிருஷ்ணன், மாணவர்களுக்கு இவ்வகை கருத்தரங்குகள் உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் எனப் பாராட்டினார்.

மேலும், முனைவர் சுப்ரமணியம் குருசாமி, பி.எஸ்.பி.எம் தேர்வில் மன அழுத்தமின்றி திடமான மனதுடன் எதிர்கொள்வதற்கான முக்கிய வழிகளை விளக்கினார்.நிகழ்வின் முக்கிய தருணமாக, 2023/24 ஆண்டு பி.எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு, ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் பிரகாஷ், பி.டி.என்.கே கல்வியக ஆசிரியர் விக்னேஷ் பாலன் விருதுகளை வழங்கினர்.

அதேபோல் அடிப்படையிலான தேர்வுகளில் சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகள், ஆசிரியர் கார்த்தியாயனி தலைமையில் வழங்கப்பட்டன. இந்த இந்த நிகழ்வு, பி.எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்களின் பயணத்தில் முக்கிய ஆதரவாக அமைந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *