நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூளையைப் பயன்படுத்த வேண்டும்! - சபாநாயகர் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 26: மக்களவையில் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும் என்று  மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் மூளையைப் பயன்படுத்த வேண்டும் என்ற கடுமையான வார்த்தைகளால் இன்று நினைவூட்டல் விடுத்தார்.

PN-Pendang நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹாஷிம் மற்றும் PH jelutong நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் ஆகியோர் இடையே ஏற்பட்ட கூச்சல் குழப்பத்திற்குப் பிறகு, விரக்தியடைந்த ஜொஹாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூளையைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கிளந்தானில் சுரங்கப் பிரச்சினைகள் தொடர்பான பல விஷயங்களில் அவாங் டிஏபி மீது குற்றம் சாட்டினார.  இது குறித்து ராயர் கேள்வி எழுப்பினார். இது விவாதமான நிலையில், ஜொஹாரி இவ்வாறு கூறினார்.

மேலும், அவாங்கை இன்னும் நிதானமாக இருக்குமாறு ஜொஹாரி வலியுறுத்தினார்.

நீங்கள் பேசும்போது உணர்ச்சிவசப்படலாம், ஆனால் எம்.பி.க்களாக, நாங்கள் எங்கள் மூளையைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அவாங்கிடம் கூறினார்.

ராயர் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டினார் அவாங்.

 இதனால் கோபமடைந்த ராயர், ஜெலுத்தோங்கில் மலாய் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நல்வாழ்வில் தானும் அக்கறை கொண்டதாகக் கூறினார்.

துடனே ஜொஹாரி குறுக்கிட்டு, அவாங் மீது தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாகக் கூறினார்.

உங்களுக்கு என்ன பிரச்சனை? உணர்ச்சிவசப்படாதீர்கள். ஒரு அறிவுஜீவியாகவும் பட்டதாரியாகவும் பேசுங்கள் என்று அறிவுறுத்தினார்.

மேலும், இது கடைசி எச்சரிக்கை  என்று ஜொஹாரி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *