உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள முஸ்லீம் உலகிற்கு வழிகாட்ட வேண்டும்!

- Muthu Kumar
- 11 Dec, 2024
கோலாலம்பூர், டிச 11:
அதிகரித்து வரும் சகிப்பின்மை, இனவெறி மற்றும் இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று (டிச. 11) அழைப்பு விடுத்தார்.
ரஷ்யா-இஸ்லாமிய உலக பார்வை குழுவின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய பிரதமர், அரசாங்கங்கள் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்றார்.
இஸ்லாமிய வெறுப்பு குற்றங்கள் முஸ்லிம் உலகமும் மனித குலமும் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் மதிப்புகள் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள முஸ்லீம் உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *