பினாங்கு பாலிக் பூலாவ் மாவட்டத்தில் மறுசுழற்சி திட்டம் செயலாக்கம்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு, நவ. 26-

சுற்றுச்சூழலில் மனிதர்களின் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் ஓர் உன்னத நடவடிக்கையில்,பினாங்கு மாநில தென்மேற்கு மாவட்டத்திலுள்ள பாலிக் பூலாவ் நகரில், மறுசுழற்சி பயனீடு திட்டம் செயலாக்கம் கண்டது.

பினாங்கு வாழ் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணும் விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியப் பங்காற்றுவதால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டி வரும் இங்குள்ள மாநகரசபையினர், மறுசுழற்சி பயன்பாட்டை அறிமுகப்படுத்தி செயலாற்றுவதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் மக்களால் வீசியெறியப்படும் குப்பைக் கழிவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாதிருக்கும் நிலையில், அவை மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எத்தகைய பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன என்பது, மறுசுழற்சி செய்வதன் மூலமே அவற்றினால் விளையும் தீமை, பெருமளவில் குறைவது தெள்ளத் தெளிவு.




இந்த அடிப்படையில் இங்கு செயலாக்கம் கண்ட இலவச மருத்துவ முகாமுடன் கூடிய மறுசுழற்சி திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு, பினாங்கு மாநகரசபைச் செயலாளராகப் பொறுப்பற்றி வரும் சியோங் சீ ஹோங், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இங்கு அமையப் பெற்ற மறுசுழற்சி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். பினாங்கு பசுமைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமை நிர்வாகி ஜோசப்பின் மேய் லிங் மற்றும் பினாங்கு மாநில மாநகரசபையில் சேவைத் திறன்மிக்க உறுப்பினர்களாக பொறுப்பாற்றி வரும் எட்வர்ட் சிவ், மாநில அரிமா சங்கப் பொறுப்பாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், மாநகரசபை ஊழியர்கள், சுற்று வட்டாரப் பொதுமக்கள் என திரளானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

குப்பைகளை வேறுபடுத்தி அவற்றை தனித் தனியாக வகைப்படுத்துவதன் மூலம் அவை மறுசுழற்சிக்கு எளிதாக அமைவதோடு, பிரித்தெடுக்கும் வேலையையும் சுலபமாக்க முடியுமென்று கூறிய மாநகரசபைச் செயலாளர் சியோங், இப்பழக்கம் ஒரு நடைமுறையாக கையாளப்படுவதன் மூலம், நாளடைவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எல்லா தரப்பினரும் இயல்பாகவே, சிறந்த பங்கினை ஆற்ற முடியுமென்றும் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *