இந்திய சமூக விவகாரப் பிரிவுக்கு பினாங்கு ஜசெக பச்சைக் கொடி!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ்டவுன், நவ. 26-

இந்திய சமூக விவகாரப் பிரிவை அமைப்பதற்கு, பினாங்கு மாநில ஜசெக இணக்கம் தெரிவித்துள்ளது. அப்பிரிவுக்கு, மாநில ஜசெக் துணைத் தலைவரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்ப்பால் சிங் தலைமை வகிப்பார். சனிக்கிழமை நடைபெற்ற பினாங்கு மாநில ஜசெக குழுவின் முதல் கூட்டத்தில் இம்முடிவு காணப்பட்டதாகவும் பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டதாகவும், மாநில ஜசெக தலைவர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

"விவாதிக்கப்பட்ட விவகாரங்களில், இந்திய சமூக விவகாரப் பிரிவை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டதும் அடங்கும்.அப்பிரிவுக்கு ராம்கர்ப்பால் சிங் தலைமை வகிப்பார். விரைவில் அவர் அப்பிரிவின் உறுப்பினர்களை நியமிப்பார். "பினாங்கில் உள்ள இந்திய மக்களின் நலன்கள் தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளமாக SOCமனிதவள அமைச்சருமான்று மனிதவள அமைச்சருமான சிம், நேற்று திங்கள்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மாநில இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, அப்பிரிவின் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினருமான சிம் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *