கேங்ஸ்டர்களுக்காக வந்த துப்பாக்கிகள் பறிமுதல்! பினாங்கு போலீஸார் அதிரடி

- Shan Siva
- 31 Jan, 2025
பினாங்கு, ஜன 31: பினாங்கில் காவல்துறையினரால் கடலில் கைப்பற்றப்பட்ட
துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், மாநிலத்தில் உள்ள பல கும்பல்களுக்கு விற்க
திட்டமிடப்பட்டதாக நம்பப்படுகிறது.
துப்பாக்கிகள்
மற்றும் தோட்டாக்களை கடத்துவதில் ஒரு பெரிய வலையமைப்பு ஈடுபட்டுள்ளதாக பினாங்கு
காவல்துறைத் தலைவர் ஹம்சா அகமது தெரிவித்துள்ளார்.
இதுவரை ஐந்து
கைத்துப்பாக்கிகள், ஒரு M4 துப்பாக்கி மற்றும் 801 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
முதற்கட்ட
விசாரணைகளின் அடிப்படையில், இதில் பினாங்கில்
உள்ள கும்பல்கள் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
இருப்பினும்,
விசாரணைகள் நடந்து வருவதால், கூடுதல் விவரங்களை வெளியிட அவர்
மறுத்துவிட்டார்.
இதுவரை,
22 மற்றும் 57 வயதுடைய இரண்டு இந்தோனேசியர்கள் உட்பட நான்கு
சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பிப்ரவரி 3 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பெராய்
கடற்பரப்பில் பதிவு எண்கள் இல்லாத இரண்டு ஃபைபர் கிளாஸ் படகுகளை கடல்சார் போலீசார்
திங்கள்கிழமை தடுத்து வைத்த பின்னர், நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *