மின் கம்பிகளைத் திருடி வந்த ஆடவர்கள் கைது!

- Muthu Kumar
- 08 Dec, 2024
இரா.கோபி
செந்தூல், டிச. 8-
செந்தூல் மாவட்டப் பகுதியில் மின் கம்பிகளைத் திருடி வந்த 5 உள்நாட்டு ஆடவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமாட் ஸுக்கார்னோ முகமட் ஸஹாரி தெரிவித்தார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி காலை 9.00 மணியளவில் கெப்போங் ஜாலான் கூனிங்கில் மின் கம்பிகள் திருடப்பட்டதாக போலீஸாருக்கு புகார் கிடைத்ததாக அவர் கூறினார்.இப்புகார் தொடர்பில் செந்தூல் மாவட்ட போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், 5 ஆடவர்கள் கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 19 முதல் 52வயதுடையவர்கள் ஆவர்.
இவர்களிடமிருந்து 2 கார்கள், 6 கைத்தொலைபேசிகள், 140 மீட்டர் மின் கம்பிகள், ஒரு மூட்டையில் 840 கிலோ மின் கம்பிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 150,000 வெள்ளி ஆகும்.விசாரணையில் இவர்கள் ஐவரும் டெலிகோம் மின் கம்பிகளைத் திருடி உலோகப் பொருள் மறுசுழற்சி கடைகளில் விற்று வந்தது தெரிய வந்தது. இவர்களைக் கைது செய்ததன் மூலம் கோலாலம்பூர் பகுதியில் நடந்த 3 திருட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டது என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு நபரை போலீஸார் தேடி வருவதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *