இந்த சிக்கல்களை நாம் தீர்க்க வேண்டும்! – அன்வார்

- Hisha Thamil
- 03 Jan, 2025
புத்ராஜெயா, ஜன 3: வறுமை ஒழிப்பு மற்றும் வெள்ளத் தணிப்பு போன்ற அவசரத் திட்டங்களுக்கான செயல்படுத்தல் காலக்கெடுவை திருத்தியமைக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் துறை அலுவலகத்தின் மாதாந்திர சபை கூட்டத்தில்
பேசிய அன்வார், ஒரு மாநிலத்தின்
திறன் அல்லது அதன் பற்றாக்குறை போன்ற காரணிகள் கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங்கில்
வெள்ளத் தணிப்பு போன்ற முக்கியமான திட்டங்களை தாமதப்படுத்த ஒரு சாக்காக
இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினர்.
அரசுக்குத் திறமை
இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பேசத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அன்வார், தாம் அதைக் கேட்க விரும்பவில்லை என்று கூறினார்.
இந்த சிக்கல்களை
நாம் தீர்க்க வேண்டும், இதற்கு
குறிப்பிடத்தக்க நிதி அர்ப்பணிப்பு தேவைப்படும் என்று அன்வார் தெரிவித்தார்.
மலேசியத்
திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வெள்ளத் தணிப்பு முயற்சிகள் உட்பட,
ஒவ்வொரு திட்டத்திற்கும் அதற்குரிய சொந்த கால
அவகாசம் இருப்பதாகவும், அது பல
கட்டங்களாகப் பிரிக்கப்பட்டதால் ஆறு ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அன்வார்
ஒப்புக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *