PKR-ல் தெங்கு ஸஃப்ருலா? - அன்வார் உறுதி!

- Shan Siva
- 16 Dec, 2024
ஷாஆலம், டிச. 16: பிகேஆர்
கட்சியில் தெங்கு டத்தோஸ்ரீ ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் சேரும் சாத்தியம்
குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று உறுதிப்படுத்தினார். அந்த விவகாரம் குறித்துக் கருத்துரைக்கும்படி
செய்தியாளர்கள் நேற்று வினவியதற்கு, பிகேஆர். எப்போதும்
பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஒரு கட்சியாகும். ஆக்ககரமான
கலந்துரையாடலுக்கும். தாராளமான உறுப்பினர் சேர்க்கைக்கும் அது ஊக்குவித்து
வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
பிகேஆர்
எப்போதும் திறந்த மனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. அமானா அல்லது ஜசெகவில்
இருந்த சில தலைவர்கள் இப்போது பிகேஆரில் இருக்கிறார்கள் என்று அன்வார் கூறினார்.
நாங்கள் நல்ல நட்புணர்வைப் பேணி வருவதால் இந்தப் பரிமாற்றம் சீராக நடைபெற்று
வந்துள்ளது என்று ஷாஆலமில் பிகேஆர் மாநாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம்
அன்வார் கூறினார்.
பிகேஆர்
கட்சியில் தெங்கு ஸஃப்ருல் சேர்வது தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடக்கக்
கட்டத்தில்தான் உள்ளது என்பதை ஒப்புக் கொண்ட அன்வார், உறுப்பினர்களைச் சேர்க்கும் நடவடிக்கையை பிகேஆர் தீவிரப்படுத்தாது என்றார்.
இது தெங்கு ஸஃப்ருலுக்கும் பொருந்தும். இதற்கான சாத்தியத்தை நாங்கள் மறுக்க
மாட்டோம் என்றார் அவர்.
பிகேஆர்
கட்சியில் சேர ஸஃப்ருல் முறைப்படி விண்ணப்பம் செய்து விட்டாரா என்று
கேட்கப்பட்டதற்கு, இப்போதைக்கு பேச்சு மட்டுமே நடைபெற்று
வருவதாகக் கூறினார். பிகேஆர் கட்சியில் சேரும் சாத்தியம் குறித்து
அறிக்கையொன்றை வெளியிடப் போவதாக அனைத்துலக வர்த்தகம் மற்றும் முதலீட்டு
அமைச்சருமான தெங்கு ஸஃப்ருல் முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *