மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு ஆமைகளைக் கடத்த முயன்றவர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

புதுடில்லி, டிச 6:

மலேசியாவில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகளைக் கடத்த முயன்ற நடவடிக்கை இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் சென்னை விமான நிலையத்தில் முறியடிக்கப்பட்டது.

மலேசியாவில் இருந்து விமானத்தில் வெளிநாட்டு வனவிலங்குகளுடன் வந்த இரண்டு பயணிகள், கடத்தப்பட்ட சரக்குகளைப் பெற காத்திருந்தவர்களுடன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் 5,193 ஆமைகளை ஒரே நாளில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதாக சென்னை சுங்கத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பல அரிய வகை உயிரினங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இதுபோன்ற அரியவகை உயிரினங்களின் தேவை அதிகரித்திருப்பதாக இந்தியாவின் செல்லப்பிராணி சந்தை இவ்விவகாரத்தை தூண்டும் சக்தியாக விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *