பெர்லிங் பொது சந்தையில் துணை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

பெர்லிங், டிச.16-

சில வாரங்களில் நாம் புதிய ஆண்டான 2025-ஐ வரவேற்க உள்ளோம். இதனை முன்னிட்டு, மக்களுடன் நெருக்கமாக உரையாடும் முயற்சியில், துணை அமைச்சர் லியூ சின் டாங் மற்றும் புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைசான் கயாட், பெர்லிங் தாமனின் உள்ளப் பொது சந்தையை நேரில் சென்று பார்வையிட்டு, 2025 ஆண்டிற்கான காலண்டர்களை வழங்கினர். இதன் போது அவர்கள் பொதுமக்களுடன் மற்றும் நெருக்கமாக உரையாடி, அங்குள்ள வியாபாரிகளின் கோரிக்கைகளையும் கவனித்தனர்.

அந்த வியாபாரிகள் வெளியிட்ட பிரதான புலம்பல், கடும் அளவிலான மற்றும் திடீர் வாடகை உயர்வு பற்றியதாக இருந்தது.இந்த உயர்வு அவர்களது வணிக செயல்பாடுகளை மட்டுமல்லாது, பொதுமக்களின் மீது கூடுதலாகச் சுமையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலை வெளியிட்டனர். இதனை உடனடியாக கையாளுமாறு அவர்கள் எதிர்பார்த்தனர், மேலும் புது ஆண்டின் ஆரம்பம் மக்களுக்கு சுமையோடு தொடங்கக் கூடாது என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.

இது தொடர்பாக, லியூ சின் டாங் மற்றும் சுஹைசான் கயாட் இச்சிக்கலுக்கான தீர்வை மேற்கொள்ள இஸ்கந்தார் புத்ரி நகராட்சி மன்றத்துடன் கலந்துரையாட உள்ளோம். இது மக்களின் நலனை கவனித்து சுமையில்லாத புதிய ஆண்டை உருவாக்கும் முயற்சியாக இருக்கும் என்று நம்புவதாக லியூ சின் டாங் உறுதியளித்தார்.

இந்த செயல்திறமான நடவடிக்கை, வியாபாரிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை வழங்கும், மேலும் மக்களின் நலனை மேம்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *