வெள்ள பாதிப்பு வீடுகளை ஆராய்ந்து மதிப்பிட கோரிக்கை-ஸாஹிட் ஹமிடி!

- Muthu Kumar
- 05 Dec, 2024
புத்ராஜெயா. டிச. 5-
புறநகர் பகுதிகளில், வெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகளை ஆராய்ந்து மதிப்பிட புறநகர் மேம்பாடு மற்றும் கூட்டரசு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து துறைகள். நிறுவனங்கள். துணை நிறுவனங்கள் ஆகியவைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.புதிய வீடுகளைத் தயார் செய்வது அல்லது பாதிக்கப்பட்ட குடியிருப்புகளைச் சீரமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தங்கள் தரப்பு மேற்கொள்ளவிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
"நாங்கள் புதிய வீடுகளைத் தயார் செய்தோ அல்லது பாதிக்கப்பட்ட குடியிருப்பை மறுசீரமைத்தோ கொடுக்கவுள்ளோம். இரண்டாவது, நாங்கள் வெள்ள நிவாரண நிதியைத் தொடங்குகிறோம். நிதி அல்லது தினசரி தேவையானப் பொருட்கள் என்ற வடிவில் உதவிகளை ஏற்பாடு செய்கிறோம். மூன்றாவது, அமைச்சு, நிறுவனம் மற்றும் துணை நிறுவனம் அளவில் மடானி குழுவைத் தொடங்கலாம். இக்குழு வெள்ளத்திற்கு பிந்தைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம்," என்றார் அவர்.
புத்ராஜெயாவில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாத அமைச்சின் கூட்டத்திலும் புத்தாக்கம் மற்றும் தர தினக் கொண்டாட்டத்திலும் உரையாற்றும்போது டாக்டர் அஹ்மட் ஸாஹிட் இவ்வாறு தெரிவித்தார்.வரும் டிசம்பர் 8ஆம் தேதி பகாங்கிலும் ஜோகூரிலும் மீண்டும் வெள்ளம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் தயாராகும்படி தேசிய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழு தலைவருமான அவர் நினைவுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *