கடற்கரையில் கூட்டமாக ஒதுங்கும் கெராங்- பேரிடருக்கான அறிகுறியல்ல!

- Muthu Kumar
- 27 Jan, 2025
கோலத் திரெங்கானு, ஜன. 27 -
கோலத் திரெங்கானு கடற்கரைகளில் கூட்டமாக ஒதுங்கி வருவதாகக் கூறப்படும் கெராங் (மட்டி) உண்பதற்கு பாதுகாப்பானவை என்றும் அத்தகைய நிலை பேரிடருக்கான அறிகுறியல்ல என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வடகிழக்கு பருவ மழை காலத்திலும் பலத்த காற்று வீசும்போதும் பெரிய அலைகள் எழும்போதும் மற்றும் குறிப்பிட்ட கடற்கரை அமைப்பு முறை காரணங்களினால், அளவுக்கு அதிகமான கெராங்கள் கடற்கரையில் கூட்டமாகக் காணப்படுவது வழக்கமாகும்.
இந்த முறையும் அக்காரணங்களினால் கெராங்கள் காணப்படுவது விசித்திரமான ஒரு சம்பவமாக இருந்தாலும், உண்மையில் அது இயற்கையின் தாக்கத்தினால் ஏற்படுவதாக, திரெங்கானு மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் உணவு மற்றும் மீன் பிரிவு விரிவுரையாளர் ரோஸ்லிசாவாத்தி அப்துல்லா தெரிவித்தார்.
"கடற்கரையில் கெராங்கள் கூட்டமாகக் காணப்படுவதற்கும் வட கிழக்கு பருவ மழை காலத்தில் 4 கடற்கரை புவி அமைப்பு முறை, வலுவான அலைகள், திசை மற்றும் காற்றின் வேகமும் காரணங்களாக இருக்கின்றன. “இத்தகைய சூழ்நிலைகளின்போது கடற்கரைகளில் ஒதுங்கும் கெராங்கள் உண்பதற்கு பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன என்று ரோஸ்லிசாவாத்தி தெரிவித்தார்.
எனினும், கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கும் கெராங்கள் பாக்டீரியா அல்லது நீர் மாசுபாட்டுக்கு இலக்காகி இருக்கக் கூடிய சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை.
ஆதலால், சமைப்பதற்கு முன்னர் அவை சரியான முறையில் சுத்தம் செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *