பேரணி நடத்த மெர்டேக்கா சதுக்கமும், சோகோ வெளிப்புறமும் பொது இடங்கள் அல்ல!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜன. 22-

போலீசாரால் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளில், எந்த ஒரு சட்ட அடிப்படையும் இல்லை என்று ஹிம்புனான் ரக்யாட் பெஞ்சி ரசுவா பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறுவதை. உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயில் நிராகரித்துள்ளார்.

பேரணி நடத்தப் போவதாக கூறப்பட்டுள்ள இடங்களின் உரிமையாளர் அல்லது அங்கு இருப்பவரிடமிருந்து முன்கூட்டியே அனுமதியை பெறுமாறு, வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள அப்பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.

“பொது இடங்களுக்கு உரிமையாளர்கள் இல்லை. ஆனால், சோகோ பேரங்காடிக்கு வெளியில் உள்ள இடமென்றால், சோகோவிடமிருந்து அதற்கு நீங்கள் அனுமதி பெற வேண்டும்.“மெர்டேக்கா சதுக்கமாக இருந்தால், அதற்கான அனுமதியை நீங்கள் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்திடமிருந்து அவசியம் பெற வேண்டும் என்று. புத்ராஜெயாவில் நேற்று நடந்த, 2025ஆம் ஆண்டு ஆசிய அனைத்துலக பாதுகாப்பு உச்சநிலை மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது சைஃபுடின் தெரிவித்தார்.

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து சினமடைய வேண்டாம் என்று. பேரணி ஏற்பாட்டாளர்களை வலியுறுத்திய அவர், 2012ஆம் ஆண்டு அமைதியாக ஒன்று கூடுதல் சட்டத்திற்கு இணங்கவே போலீசார் செயல்படுகின்றனர் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

பேரணி தொடர்பில் டாங் வாங்கி போலீசார் விதித்திருக்கும் நிபந்தனைகள், அமைதியாக ஒன்று கூடுதல் சட்டத்திற்கு புறம்பானவையாகவும், சட்ட அடிப்படையில் இல்லை என்றும் பேரணி செயலகம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *