திரெங்கானுவில் மூன்றாம் கட்ட வெள்ள அபாயம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 17-

கிழக்குக் கரையோர நகரான திரெங்கானுவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனத்த மழைபெய்யும். இதனால், அம்மாநிலத்தில் மூன்றாவது முறையாக வெள்ளப் பேரிடர் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

கெமமான், பெசுட், செத்தியூ, உலுதிரெங்கானு ஆகிய நகர்களில் வெள்ளம் ஏறும் அபாயம் நிலவுகிறது. அந்நகர்கள் அனைத்தும் பிரதான ஆற்றுப் படுகைகளிலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ளன என்று திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாபியா மாட் சொன்னார்.

கிழக்குக் கரையோரத்தில் கடந்த நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் முதல் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மிக மோசமான வெள்ளப் பேரிடர் அதுவாகும். அந்தப் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒன்றரை ஒன்றரை லட்சம் லட்சம் பேர் வீட்டை வீட்டை விட்டு வெளியேறினர்.அதன் பின்னர், கடந்த வாரம் இரண்டாவது வெள்ளப் பேரிடர் நடைபெற்றது. அதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *