அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் - இந்திய உளவுத்துறை!

- Muthu Kumar
- 21 Jun, 2025
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என பகீர் செய்தி வெளியாகியுள்ளது. உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி அமர்நாத் யாத்திரீகர்களுக்கு கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்னும் சில நாட்களில் பனிலிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ளது. இதில் நாள்தோறும் ஒவ்வொரு நாளும் 30,000-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் சென்று வருகின்றனர். குறித்த யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையை சென்றடைவார்கள். இவ்வாறு யாத்திரையின் போது லஷ்கர் அல்லது இதன் ஆதரவு படையினர் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, பிர் பஞ்சால் காட்டில் மறைந்து பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், சிஆர்பிஎப் படை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கூடுதல் பாதுகாப்பு ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பஹல்காம் தாக்குதலை நடத்திய அமைப்பினர் இன்னும் சுதந்திரமாக உலாவிவருகின்றனர். அவர்கள் இன்னும் முழுவத்துவமாக அழிக்கப்படவில்லை. இதனால் திடீர் தாக்குத்தல்கள் நடத்தலாம் என்ற அச்சம் தரும் விஷயமாக உள்ளது என உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,யாத்திரை செல்லும் பகுதியில் வான் வழி பயணத்திற்கு இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *