பெர்சாத்துவின் பொதுச்செயலாளர் அஸ்மின் அலி!- முகைதீன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 26: பெர்சாத்து கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அஸ்மின் அலி நியமிக்கப்பட்டதை பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிலாங்கூர் பெர்சாத்து தலைவர் நியமனம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் முகைதீன் கூறினார்.

உலு கிள்ளான்  சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின், அடுத்த தேர்தலில் மாநிலத்தைக் கைப்பற்றும் பணியில் சிலாங்கூர் பெரிக்காத்தானை வழிநடத்துவதில் கவனம் செலுத்த விரும்பியதால், பதவியை நிராகரித்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

பெர்சாத்து மற்றும் பெரிகாத்தான் நேஷனல்பொதுச் செயலாளராக அஸ்மினை நியமிக்க தாம் ஒப்புக்கொண்டதாகவும், இதனை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் முகைதீன் தெரிவித்தார்.

பெர்சாத்துவை ஒரு முன்மாதிரியான கட்சியாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

கடந்த நவம்பர் 2 ஆம் தேதி பெர்சாத்துவின் கட்சித் தேர்தலில் அஸ்மின் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *