சீனாவில் நடைபெற்ற நாடகப் போட்டியில் தேசிய மாதிரி மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு தங்கம்!

- Muthu Kumar
- 12 Dec, 2024
(கோகி கருணாநிதி)
மாசாய், டிச. 12-
தேசிய மாதிரி மாசாய் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களால் அமைக்கப்பட்ட நாடகக் குழு அனைத்துலக அளவில் தமிழர் பெருமையை அறியச் செய்துள்ளது. சீனாவின் சென்சென் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச நாடகப் போட்டியில் இக்குழு தங்கப் பதக்கத்தை வென்று, தங்கள் திறமையை உலகமெங்கும் அங்கீகரிக்கவைத்துள்ளது.
இந்த நிகழ்வில், நாடகத்திற்கான மிக உயர்ந்த தகுதிகள் மற்றும் நடிப்புக்கான நேர்த்திகளை வெளிப்படுத்தியதன் மூலம் "மிக அற்புதமான மேடை நடைமுறைக்கான விருது எனும் சிறப்பு அங்கீகாரத்தையும் பெற்றது.
மேலும், குழுவின் முன்னணி கலைஞர்கள் துர்கா தியாகராஜன் மற்றும் பார்கவி பிரகாஷ், தனிப்பட்ட முறையில் "சிறந்த நடிகர்' மற்றும் “சிறந்த நடிகை" விருதுகளை வென்று தங்கள் தனிப்பட்ட திறமையையும் மின்னவைத்தனர்.
இச்சிறப்பைத் தாங்கி வரும் மாசாய் தமிழ்ப்பள்ளி நாடகக் குழுவினரின் கடின உழைப்புக்கும் மாணவர்கள் பெற்ற வெற்றிக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்! உங்கள் சாதனை, தமிழ் மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் புதிய மைல்கல்லாக இருக்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *