சுவாசப் பாதை தொற்று – IJN ன்னில் மகாதீர்! மகாதீர் தொடுத்த ஜாஹிட் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

- Shan Siva
- 16 Oct, 2024
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் மகாதீர் தேசிய இருதயக் கழகமான IJN-ல் அனுமதிக்கப்பட்டதால்,
துணைப் பிரதமர் ஜாஹிட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மகாதீர் தொடர்ந்த அவதூறு
வழக்கு அக்டோபர் 29ஆம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாதீரின்
வழக்கறிஞர் மியோர் நார் ஹைடிர் சுஹைமி இதனை தெரிவித்தார்.
நுரையீரல்
தொற்றுக்காக நேற்று மாலை IJN இல் மகாதீர்
அனுமதிக்கப்பட்டதாக நீதித்துறை ஆணையர் கான் டெச்சியோங்கிற்கு அவர் தெரிவித்தார். மேலும், அக்டோபர் 25 வரை மருத்துவ விடுப்பில் இருப்பார் என்றும் அவர்
கூறினார்.
99 வயதான மகாதீர்
குறைந்த அளவிலான சுவாச பாதை நோய்த்தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக IJN
இருதயநோய் நிபுணரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விசாரணை
அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்டி என்ற
பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஜாஹித் மீது மகாதீர்
வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தம்மை இழிவுபடுத்தும் வகையில்
குறிப்பிடப்பட்டதாக மகாதீர் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017, ஜூலை அன்று சிலாங்கூர் கெலானா ஜெயாவில் நடந்த அம்னோ பிரிவு
கூட்டத்தில் ஜாஹிட் இத்தகைய அவதூறான கருத்தை தெரிவித்ததாக அவர் குற்றம்
சாட்டினார்.
இந்த அறிக்கை
தான் மலாய் அல்லது முஸ்லீமாக பிறக்கவில்லை என்றும், தனது அசல் பெயர் இஸ்கந்தர் குட்டியின் மகன் மகாதீர் என்றும்
சுட்டிக்காட்டியதாக மகாதீர் கூறினார்.
பழைய அடையாள
அட்டையின் நகலில் உள்ள தகவலின் அடிப்படையில் ஒரு நபரின் பெயர் குறிப்பிடப்பட்டதாக
ஜாஹிட் தனது வாதத்தில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *