முதலில் தேர்தலில் வெற்றி பிறகு மந்திரி பெசார் ஆவது பற்றி யோசிக்கலாம்!

- Muthu Kumar
- 02 Dec, 2024
கோலாலம்பூர், டிச 2:
சில மாநிலங்களில் பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருவது குறித்து பாஸ் கட்சியின் துணைத் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.பெர்சாத்து முதலில் தேர்தலில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிறகு மந்திரி பெசார் ஆவது பற்றி யோசிக்கலாம் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசினுக்கு நினைவூட்டியுள்ளார்.
நாம் முதலில் வெற்றி பெற வேண்டும், அதன் பிறகுதான் 'வெகுமதிகள்' பற்றி விவாதிக்க முடியும், என்று அவர் பகாங் மாநில சட்டசபை கூட்டத்தில் சூசகமாகத் தாக்கும் விதமாக மேற்கோள் காட்டினார்.
பகாங், பேராக் மற்றும் சிலாங்கூரில் உள்ள மந்திரி பெசார் பதவிகளை ஒற்றுமை அரசாங்கத்திடம் இருந்து பெரிக்காத்தான் பறிக்க வேண்டும் என்று முகைதீன் கூறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *