எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 தொழிலாளர்கள் காயம்!

- Sangeetha K Loganathan
- 16 Feb, 2025
பிப்ரவரி 16,
பாயான் பாருவில் உள்ள தொழில்சாலையில் பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடித்தததில் 3 தொழிலாளர்கள் காயமடைந்ததாக Bayan Baru மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Abdul Manap Kadir தெரிவித்தார். நண்பகல் 1.16 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்த நிலையில் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.
அதிக கலன்களைக் கொண்ட FM 200 எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 49 வயதானத் தொழிலாளருக்கு வலது கால் எலும்பு முறிந்த நிலையில் 38 வயது தொழிலாளருக்கும் 40 வயது மற்றொரு தொழிலாளருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாகவும் Bayan Baru மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Abdul Manap Kadir தெரிவித்தார். சிலிண்டர் வெடித்ததற்கானக் காரணத்தை ஆராய்ந்து வரும் நிலையில் சம்மந்தப்பட்ட தொழில்கிடங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tiga pekerja cedera akibat letupan silinder gas FM 200 di sebuah kilang di Bayan Baru. Seorang pekerja berusia 49 tahun patah kaki manakala dua lagi cedera ringan. Punca letupan sedang disiasat dan premis tersebut ditutup sementara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *