வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேற்று தவறான அழைப்புகள்!

- Shan Siva
- 04 Dec, 2024
பாசிர் மாஸ், டிச 4:
நவம்பர் 29 முதல் வெள்ளம் தொடர்பான 114 தவறான தொலைபேசி அழைப்புகள் காவல்துறையினருக்கு வந்துள்ளதாக பாசிர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் கமா அசுரல் முகமட் தெரிவித்தார்.
பாகோங் மற்றும் மெராண்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேற்று மட்டும் ஏழு தவறான அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டால், அந்த அழைப்புகள் போலியானது என்பது தெரியவந்ததாக அவர் கூறினார்.
இந்த நடத்தை குறித்து அவர் தனது ஏமாற்றத்தை அவர் வெளிப்படுத்தினார். இது மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *