செகிஞ்சானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக பல வீடுகள் மற்றும் கடைகள் சேதம்!
- Muthu Kumar
- 06 Mar, 2025
ஷா ஆலம், மார்ச் 6 –
செகிஞ்சானில் இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக செகிஞ்சான், பாரிட் 4 வட்டாரத்திலுள்ள பல வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையோரக் கட்டுமானங்கள் உட்பட பல குடியிருப்பாளர்களின் வீட்டுக் கூரைகள் 50 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகளைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
பலத்து காற்று வீசிய அதே நேரத்தில் கன மழையும் தொடர்ந்து பெய்ததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமை சூப்ரிண்டெண்டன் அசாஹாருடின் தாஜூடின் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
Ribut kuat melanda Sekinchan, Parit 4, pada pagi 6 Mac, menyebabkan kerosakan kepada rumah dan kedai. Video bumbung diterbangkan lebih 50 meter menjadi tular di media sosial. Hujan lebat turut menyukarkan penduduk. Polis Kuala Selangor mengesahkan kejadian tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



