சிஇபியு செயல் திட்டத்திற்கு பதிலாக புதிய நடவடிக்கை திட்டம் அறிமுகம்!

- Muthu Kumar
- 12 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 12-
வரும் ஐந்து ஆண்டுகளில் நிதி அமைச்சர்களின் செயல்முறைக்கு முன்னுரிமைகளை அளிக்கும் வகையில் ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பான ஏபெக்கின் நிதி அமைச்சர்கள் வரும் அக்டோபரில் சிஇபியு செயல் திட்டத்திற்கு பதிலாக புதிய நடவடிக்கைத் திட்டத்தை அறிமுகப்படுத்தவிருக்கின்றனர்.
ஆசிய பசிபிக் சமூகத்திற்கான புத்ராஜெயா ஏபெக் தூரநோக்கு பார்வையை முன்னேற்றுவதற்கான நடுத்தர கால முயற்சிகள், சாதனைகளை இப்புதிய நடவடிக்கைத் திட்டம் கோடிட்டு காட்டும் என்று துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார். "தென்கிழக்கு ஆசியாவில் நமது பொதுவான முன்னுரிமைகள் இந்த புதிய ஆசிய பசிபிக் நடவடிக்கைத் திட்டத்தில் நன்கு பதிக்கப்பட்டுள்ளதையும் ஆசியான், ஏபெக்கில் உள்ள முன்முயற்சிகள் ஒன்றுக்கொன்று இணக்கமாகவும் பரஸ்பர ஆதரவுடனும் இருப்பதை உறுதி செய்யவும் ஆசியான் உறுப்பினர்கள் இணைந்து பணியாற்றுவது மிக அவசியம்," என்றார் அவர்.
உறுப்பு நாடுகளிடையே ஒருங்கிணைந்த, கூட்டு நடவடிக்கைகளுக்கான தளத்தை வழங்குவதில் ஏபெக், ஆசியான் முக்கிய பங்கு வகிப்பதாக லிம் ஹுய் யிங் வலியுறுத்தினார். அத்துடன் தனியார் துறையுடன் அரசாங்கம், ஒழுங்குமுறை நிறுவனங்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதும் அதிகரிப்பதும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
APEC akan memperkenalkan pelan tindakan baharu Oktober ini untuk menggantikan CEPI-BES, bagi mengutamakan keutamaan menteri kewangan selama lima tahun akan datang, kata Timbalan Menteri Kewangan Lim Hui Ying, selaras dengan sasaran serantau dan kerjasama ASEAN.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *