மக்களவை என்பது மற்றவர்களை அவதூறு பேசும் இடம் அல்ல! - மாமன்னர் நினைவுறுத்து

- Shan Siva
- 03 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 3: மக்களவை என்பது மற்றவர்களை அவதூறாகப் பேசுவதற்கோ அல்லது அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கோ உரிய ஓர் இடம் அல்ல என்பதை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
15வது
நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் இன்று
தனது உரையின் போது, சுல்தான்
இப்ராஹிம், எம்.பி.க்கள்
அற்ப அரசியலுக்கு அப்பால் உயர்ந்து, அரசியல் ஆதாயத்திற்காக பிரச்சினைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்
என்றும் வலியுறுத்தினார்.
ஒற்றுமைக்கு
முன்னுரிமை அளித்து ஒற்றுமையை ஊக்குவிக்குமாறு சட்டமியற்றுபவர்களுக்கும் அவர்
அழைப்பு விடுத்தார்.
ஒவ்வொரு
பிரச்சினையையும் அரசியலாக்குவதை நிறுத்திவிட்டு, உங்கள் கட்சி அல்லது குழுவிற்கு மட்டும் முன்னுரிமை
அளிப்பதைத் தவிர்க்கவும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *