புதிய மின்சாரக் கட்டணம் ஜூலையில் அமலாகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப், 20-

உத்தேச புதிய மின்சாரக் கட்டண விவரங்களை எரிபொருள் பரிமாற்றம் மற்றும் குடிநீர் உருமாற்ற அமைச்சும் எரிபொருள் ஆணையமும் தற்போது இறுதி செய்து வருகின்றன. ஜூலை மாதத்தில் இது நடப்புக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது பெறப்பட்ட ஆலோசனைகளையும் மாற்றுக் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தேச கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று எரிவொருள் பரிமாற்றம் மற்றும் குடிநீர் உருமாற்ற அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூகப் தெரிவித்தார்.

மக்களின் நலவாழ்வைக் கருத்தில் கொண்டு இந்த உத்தேச கட்டண விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவின் 85 விழுக்காட்டு குடும்பத்தினருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தra நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அத்தரப்பினரின் நலன்கள் தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்று மக்களவையில் அவர் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *