இஷா பெயரில் புதிய சட்டம்! நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 12:  கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைய : பகடிவதையால்‌ தன்னுயிரை மாய்த்துக்கொண்ட இஷா எனப்படும்‌ ராஜேஸ்வரியின்‌ மரணம்‌ நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த மரணம்‌ குறித்து நேற்று மக்களவையில்‌ பகடிவதை சட்டத்‌ திருத்தத்தை தாக்கல்‌ செய்து நிறைவேற்றிய சப்டத்திருத்தங்களுக்கான அமைச்சர்‌ டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான்‌ 507 (டி) இஷா பிரிவு எனும்‌ சட்டப்‌ பிரிவை நிறைவேற்றியுள்ளார்‌.

இந்த இஷா சட்டப்பிரிவு வெறும்‌ பெயரல்ல என்று கூறிய டத்தோஸ்ரீ அஸாலினா அவரது மரணத்திற்கு நியாயம்‌ கிடைக்கும்‌ முன்னெடுப்புகளின்‌' தொடக்கமாகும்‌ என்றார்‌‌.  இனி யாரும்‌ பகடிவதையால்‌ பாதிக்கப்படக்கூடாது. மேலும்‌ ஓர்‌ இஷாவை நாம்‌ இழந்துவிடக்‌ கூடாது.  நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டத்திருத்தத்தில்‌ பகடிவதை குற்றங்களும்‌ இணைக்கப்பட்டுள்ளன என்றார்‌ அவர்‌. 

இதனிடையே இஷாவின்‌ மரணத்திற்கு நியாயம்‌ கிடைக்கும்‌ வகையில்‌ சட்டத்துறை அமைச்சர்‌ டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான்‌ அறிவித்திருக்கும்‌ இந்தப் புதிய இஷா சட்டப்பிரிவுக்கான பெயர்‌ வரவேற்கத்தக்க ஒன்று என்று ஓம்ஸ்‌ அறவாரியத்‌  தலைவரும்‌ அரிமா எனப்படும்‌ மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கத்தின்‌ தலைவருமான ஓம்ஸ்‌ பா.தியாகராஜன்‌ கூறினார்‌. 

சமூக ஊடகங்களில்‌ குறிப்பாக இணையதளங்களில்‌ பகடிவதை சம்பவம்‌ தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வுகாண அரசாங்கம்‌ நிறைவேற்றியுள்ள இந்த சட்டத்‌ திருத்தம்‌ அனைவருக்கும்‌ ஓர்‌ எச்சரிக்கையாகும்‌.  அதேவேளையில்‌ இணையதளங்களில்‌ பகடிவதை செய்யும்‌ நபர்களை அரசாங்கம்‌ கண்காணிப்பதோடு கடுமையான தண்டனையும்‌ வழங்க வேண்டும்‌ என ஓம்ஸ் பா.‌தியாகராஜன்‌ கேட்டுக்‌ கொண்டார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *