‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தம்: தொழில்நுட்ப கோளாறால் திடீர் தடை
- Surendran Sumdraraj
- 11 Jun, 2026
சென்னை, ஜூன் 11 –
யூடியூப் உலகில் பிரபலமான வி.ஜே. சித்து இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை வி.ஜே. சித்து எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத் கான், கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வ அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் நீண்ட நேரம் தொடர்ந்து பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. இதன் போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டரில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த தடை தற்காலிகமானது என்றும், தேவையான தொழில்நுட்ப சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து படக்குழு சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



