பள்ளிகளில் வெள்ளம் புகுந்தால் மாணவர்கள் வேறு பள்ளிகளில் தேர்வு எழுதலாம்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, டிச. 1-

தாங்கள் தேர்வு எழுதவிருக்கும் பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால், அப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தேர்வு எழுதுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ள வேறு பள்ளிகளில் தேர்வை எழுதலாம் என்று, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார்.

தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் தேர்வு எழுத முடியாத நிலை எந்த ஒரு மாணவருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்."வெள்ளப் பேரிடர் காரணமாக ஆபத்து அவசர வேளையில், தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்திராத வெளி மாணவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை சம்பந்தப்பட்டவர்கள் கொண்டிருப்பதற்காக, அத்தகைய எஸ்பிஎம் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

'ஏதாவது ஒரு பள்ளி பாதிக்கப்பட்டால், அப்பள்ளியில் எஸ்பிஎம் தேர்வை எழுத முடியாத நிலையை எதிர்நோக்கும் மாணவர்கள், வேறு பள்ளிகளில் அத்தேர்வை எழுதலாம்" என்று, கிளந்தான். கோத்தா பாருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது ஃபட்லினா தெரிவித்தார்.

தாய்லாந்தின் கோலோக்கில் தங்கியிருக்கும் மற்றும் ரந்தாவ் பாஞ்சாங்கில் பயிலும் மலேசிய மாணவர்கள் குறித்து பேசிய அவர், அதற்கு தமது அமைச்சு ஒரு தீர்வைக் கண்டிருப்பதால், இன்று டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அப்பிரச்சினை மீண்டும் எழாது என்றார்.மலேசியாவில் உள்ள பள்ளிகளுக்கு வருவதற்காக நாள் தோறும் கோலோக் ஆற்றைக் கடக்க, தாய்லாந்தைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் சட்டவிரோத தளங்களைப் பயன்படுத்தி வருவதாக இதற்கு முன்னர் கூறப்பட்டிருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *