மானியக் கசிவுகள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், அரசாங்கச் செலவுகள் உயரும்!- பிரதமர்

top-news
FREE WEBSITE AD

பட்டர்வொர்த், நவம்பர் 2: மானியக் கசிவுகள் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், மானியங்கள் உத்தேசிக்கப்பட்ட குழுக்களைச் சென்றடையாமல் போகலாம் என்றும், அரசாங்கச் செலவுகள் தொடர்ந்து உயரும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கவலை தெரிவித்தார்.

பல்வேறு மாநாடுகள் மற்றும் சர்வதேச பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகள் மலேசியா மிகக் குறைந்த வரி விகிதங்களைக் கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டதாகவும், அதே நேரத்தில் ஆசியாவிலேயே அதிக மானியங்களை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

நம்பகமான தரவு மற்றும்  நமது மானியங்கள் அதிகமாக இருப்பது ஒரு நல்ல செய்தி என்றாலும், பல மானியக் கசிவுகள் மற்றும் விரயங்கள் ஏற்படுவதைத் தாம்  காண்பதாகவும், இது கவனிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *