பிறந்த குழந்தையைக் கைவிட்ட இளம்பெண் கைது!

- Sangeetha K Loganathan
- 17 Feb, 2025
பிப்ரவரி 17,
பினாங்கு பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தை பிலாஸ்டிக் பையில் சுற்றியபடி மீட்கப்பட்டது தொடர்பான விசாரணையில் 20 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். காலை 10 மணியளவில் பேருந்து நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட நிலையில் குழந்தையின் தாயார் என நம்பப்படும் 20 வயது இளம் பெண் நண்பகல் 2 மணிக்குத் தனியார் மருத்துவமனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு வடகிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள CCTV காணொலி மூலமாக இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காலை 8 மணிக்கே குழந்தையை அவர் பேருந்து நிலையத்தில் விட்டு சென்றதாகவும் பினாங்கு வடகிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
Seorang remaja perempuan berusia 20 tahun ditahan polis selepas meninggalkan bayi lelaki yang baru dilahirkan di sebuah perhentian bas di Pulau Tikus, George Town. Polis berjaya menahan suspek dalam masa kurang lima jam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *