ஜொகூரின் பெல்டா தெங்காரோவில் காட்டு யானை தாக்கி தோட்டத்தொழிலாளி ஒருவர் பலி! மற்றொருவர் காயம்!

top-news
FREE WEBSITE AD

மெர்சிங், செப். 28-

ஜொகூரின் மெர்சிங் அருகே உள்ள பெல்டா தெங்காரோவில் காட்டு யானையொன்று தாக்கியதில் தோட்டத்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமுற்றார்.

எல்கேடிபி தெங்காரோ தேசியப் பள்ளி அருகே நேற்றுமுன்தினம் முற்பகல் 11 மணியளவில் காட்டு யானை ஒன்று நிற்பதை அவ்விரு தொழிலாளிகளும் கண்டுள்ளனர். பள்ளியின் பாதுகாப்பைக் கருதி அந்த யானையை விரட்டுவதற்கு அவர்கள் முயன்றுள்ளனர். அவ்வேளையில் சினம் கொண்ட அந்த யானை, அவர்களை விரட்டித் தாக்கியது.

அதில் ஒரு தொழிலாளியின் கழுத்திலும் நெஞ்சுப் பகுதியிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் மரணமடைந்தார். மற்றொரு தொழிலாளிக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. இடுப்பெலும்பும் முறிந்தது. அவர் ஜொகூர்பாருவில் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *