மின் கேபில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது! – SENTUL POLIS

- Thina S
- 13 Dec, 2024
டிசம்பர் 13,
சிலாங்கூரில் பல்வேறு குடியிருப்புப் பகுதியிலிருந்து மின் கேபிள்களைத்
திருடிய கும்பலைச் சேர்ந்த 7 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகச் செந்தூல்
மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Sukarno Mohd Zahari தெரிவித்தார். கைது செய்யப்பட்ட
7 பேரும் 24 முதல் 37 வயதுடைய ஆண்கள் என அவர் தெரிவித்தார்.
அதிகாலை 5 மணியளவில் Manjalara Kepong பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்
துறை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய Ford Ranger , Perodua
Myvi ரக இரு கார்களைச் சோதனையிட்டதில் மின் கேபில்கள் திருடுவதற்கான
உபகரணங்கள் இருந்ததாகவும் காரில் இருந்த 7 பேரிடமும் உபகரணங்களை வைத்திருப்பதற்கான
ஆவணங்கள் இல்லாததால் விசாரணை நடத்தியதில் சிலாங்கூரில் சுமார் 15க்கும் மேற்பட்ட பகுதிகளில்
மின் கேபில்களைத் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *