பள்ளிவாசல் தொழுகையின் போது சிறுமையை தூக்கிய காமுகன்!

- Shan Siva
- 21 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 21: சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள மஸ்ஜித் ஜமேக் சுங்கை
மாசினில் இன்று காலை ஒரு நபர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும்
சம்பவம் குறித்த புகாரைப் பெற்றதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தங்களுக்கு காவல்துறை
புகார் கிடைத்துள்ளது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் எஃப்எம்டி ஊடகத்திடம் தெரிவித்தார்.
முன்னதாக,
அந்த நபர் மசூதியின் பெண்கள் பகுதிக்குள்
பதுங்கிச் சென்று, பின்னர் பெண்கள்
கூட்டத்தின் பின்னால் சென்று, காலை தொழுகை செய்து கொண்டிருந்த போது சிறுமியை தூக்கிச் செல்லும்
சிசிடிவி காட்சிகள் வைரலாகின.
குற்றவாளியை
உடனடியாகக் கைது செய்து, சம்பவம் குறித்து
முழுமையாக விசாரிக்குமாறு காவல்துறைக்கு வலைத்தளவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *