நாங்கள் குற்றவாளிகள் அல்ல! GISBH நிறுவனத்தினர் வாதம்!

- Sangeetha K Loganathan
- 12 Feb, 2025
பிப்ரவரி 12,
சிறார்களைக் கொடுமைப்படுத்திய வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள GISB Holdings நிறுவனத்துடன் தொடர்புடைய 21 பேர் இன்று விசாரணைக்காக உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். கைது செய்யப்பட்டிருந்த 12 ஆண்களும் 9 பெண்களும் GISB Holdings நிறுவனத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் சிறார் கொடுமைகளைப் புரியவில்லை என்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சுகாதாரச் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதால் அவர்களுக்கான ஜாமீன் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிலுவையில் வைத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஜாமின் மனுவை விசாரணைக்குப் பின்னர் ஒப்புதல் அளிப்பதாகவும் மார்ச் 17 ஜாமீன் மனுக்கான விசாரணையைத் தொடங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Seramai 21 individu yang dikaitkan dengan GISBH menafikan sebarang penglibatan dalam penderaan dan mendakwa hanya memberi perlindungan kepada kanak-kanak tersebut. Beberapa tertuduh menghadapi masalah kesihatan menyebabkan mahkamah menangguhkan keputusan mengenai permohonan jaminan mereka. Prosiding jaminan dijadualkan bermula pada 17 Mac.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *