கேரள பயணத்தைத் திடீரென ரத்து செய்தார் கவர்னர் அர்லேகர்

top-news
FREE WEBSITE AD

தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது கேரள பயணத்தை திடீரென ரத்து செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தற்போதைய பலம் 112 ஆக உயர்ந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இன்னும் கிடைக்காத சூழ்நிலை நீடிக்கிறது. இதனால் அரசியல் ஆலோசனைகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

முன்னதாக விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க முடியாத காரணத்தால், கவர்னர் தரப்பில் இதுவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கேரளா செல்ல இருந்த கவர்னர் அர்லேகர் தனது பயணத்தை ரத்து செய்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்பதால், கவர்னரின் இந்த முடிவு பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது. தமிழக அரசியல் நிலவரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *