மாற்றுத்திறனாளிகளுக்கு தைப்பூச தரிசனம்! உதவிய மலேசிய தமிழன் உதவிக் கரங்கள் அமைப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், பிப் 3: இந்த ஆண்டு தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கு, ஜாலான் கெபூன் பூங்காவில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு இன்று வருகை புரிந்த 25 மாற்றுத் திறனாளி பக்தர்களை  மலேசியா தமிழன் உதவி கரங்கள் (MTUK) என்ற அரசு சாரா அமைப்பு சுமந்து சென்று, அவர்களைப் பிரார்த்தனை செய்ய உதவி புரிந்தனர்.

இந்த அமைப்பு 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இதுபோன்ற சமூக நடவடிக்கைகளை நடத்தி வருவதாகவும், பினாங்கில் உள்ள கோயிலுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு உதவுவது இதுவே முதல் முறை என்றும் MTUK நிறுவனர் டாக்டர் ஏ. முரளி தெரிவித்தார்.

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஏற முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பு உதவியதாகவும் அவர் கூறினார்.

கோலாலம்பூர் மற்றும் பினாங்கிலிருந்து 125 தன்னார்வலர்கள் சேர்ந்து சக்கர நாற்காலியில் பயணித்த பக்தர்களை 513 படிகள் வழியாக கோவிலின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *