சம்மன்களுக்குத் தீர்வு காணாத தாய்லாந்து வாகனங்கள் திரும்பிச் செல்ல அனுமதி இல்லை!

- Shan Siva
- 22 Jan, 2025
ஆராவ், ஜன 22: கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், தாய்லாந்தைச் சேர்ந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட 54 நிலுவையில் உள்ள சம்மன்களுக்கு தீர்வு காணும் வகையில், பெர்லிஸ் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) RM122,000 வெள்ளியை வசூலித்தது.
மலேசியாவை விட்டு
வெளியேறுவதற்கு முன்பு நிலுவையில் உள்ள சம்மன்களை செலுத்தத் தவறிய வெளிநாட்டில்
பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதன் இயக்குனர்
நோரைனி முகமட் நாவி கூறினார்.
நிலுவையில் உள்ள
சம்மன்களைக் கொண்ட வாகனங்கள் தாய்லாந்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படாது, மேலும் சர்வதேச சுழற்சி அனுமதி (ICP) இன் கீழ் சீல் வைக்கப்படலாம் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *