நீதித் துறையில் அரசியல் தலையீடு இருக்காது! அன்வார் உறுதி!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 26,

நீதித்துறையில் அரசியல் கட்சிகளின் தலையீடு ஒரு நாளும் இருக்காது என பிரதமர் அன்வார் நம்பிக்கை அளித்துள்ளார். மக்களின் நலனையும் நாட்டின் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதில் நீதித் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது எனும் போது, அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்காது என அன்வார் தெரிவித்தார்.

பிரதமராகப் பொறுப்பேற்கும் முன்னமே நீதித்துறையின் செயல்பாடுகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் தற்போது பிரதமராக இருக்கும் நிலையில் ஒற்றுமை கூட்டணியில் ஆட்சி அமைத்திருக்கும் கூட்டணிக் கட்சிகளும் நீதித் துறைக்கு மரியாதை அளிப்பதைத் தாம் உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கும் அரசியல் தலைவர்கள் அவர்களைக் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க அரசாங்கம் எந்தவொரு வகையில் பங்களிக்காது என்றும், அரசியல் கட்சி சார்ந்தவர்கள் நீதித்துறையில் இருப்பதையும் தாம் விரும்பவில்லை என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *