மலேசியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்! – ஆய்வு சொல்லும் முடிவுகள்

- Shan Siva
- 31 Dec, 2024
கோலாலம்பூர், டிச 31: தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) சமீபத்தில் மலேசியர்கள் தற்போது எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை ஓர் ஆய்வின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
LPPKN இன் படி, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் அதிகமான வாழ்க்கைச்
செலவு, வீட்டு வருமானத்தை
உயர்த்த பல வேலைகள் செய்ய வேண்டிய அவசியம், குழந்தைகளை வளர்ப்பதில் செலவுகள் அதிகரிப்பது மற்றும்
குடும்ப நேரம் மற்றும் கேஜெட்ட்டுக்கு அடிமையாதல் ஆகியவை அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
97% பதிலளித்தவர்களில், 71.6% பேர் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் குறித்தும்,
71.6% பேர் அதிக வாழ்க்கைச்
செலவு எவ்வாறு குடும்பங்களுக்கு பெரும் சுமையாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டதாகவும்
கணக்கெடுப்பு காட்டுகிறது.
கணக்கெடுப்பில்,
பதிலளித்தவர்களில் 41.8% பேர் தங்கள் குடும்பங்களுடன் போதுமான நேரத்தை செலவிட
முடியாமல் தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மலேசியர்கள்
எதிர்கொள்ளும் மற்றொரு சவால், கேஜெட்டுகளுக்கு
அடிமையாகி இருப்பது, பதிலளித்தவர்களில்
33.2% பேர் இந்த விஷயத்தை
முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
குடும்பச்
செயல்பாடுகள் என்று வரும்போது, 61.3% பங்கேற்பாளர்கள், குடும்பத்தின்
முக்கிய செயல்பாடுகள் தினசரி ஒன்றாகச் சாப்பிடுவதாகவும், அதைத் தொடர்ந்து குடும்பக் கூட்டங்கள் 51.6% என்றும், வாராந்திர பொழுதுபோக்கு நடவடிக்கைகள் (32.1%) என்றும் கூறுகிறார்கள்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *