அம்னோ + டி.ஏ.பி! ஒரு கண்ணாடி! கல்லெறிந்தால் நொறுங்கிடும்! - Hamzah Zainudin!

- Sangeetha K Loganathan
- 29 Nov, 2024
நவம்பர் 29,
ஆட்சியை நடத்தும் ஒற்றுமை கூட்டணி கண்ணாடி போன்றது, ஒரு கல்லெறிந்தால் போதும் சுக்குநூறாகிவிடும் என எதிர்க்கட்சித் தலைவரும் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான Datuk Seri Hamzah Zainudin தெரிவித்துள்ளார்.
முன்னதாகப் பெரிக்காத்தான் ஒற்றுமை கூட்டணியின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் செயல்படுவதைக் கைவிட்டு விட்டு, மக்கள் பணியில் செயல்படுங்கள் என பாரிசான் தலைவரும் துணைப்பிரதமருமான ZAHID HAMIDI கருத்துத் தெரிவித்த நிலையில் மடானி அரசைக் கவிழ்க்கும் செயலைப் பெரிக்காத்தான் இன்னும் தொடங்கவில்லை என Hamzah Zainudin பதிலளித்தார்.
ஆட்சியைக் கவிழ்க்க பெரிக்காத்தான் நினைத்தால் அது எப்பவோ நிகழ்ந்திருக்கும் என்றும் அதற்கு பல வாய்ப்புகள் பெரிக்காத்தானுக்குக் கிடைத்தும் பெரிக்காத்தான் குறுக்கு வழியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். டி,ஏ,பியும் அம்னோவும் இணைந்து ஆட்சியமைப்பதே இரு கட்சிகளுக்கும் மக்கள் ஆதரவை இழக்க வைத்துள்ள நிலையில் பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை அமைத்து பதில் கொடுப்பதாக Hamzah Zainudin தெரிவித்தார்.
Hamzah Zainudin menyifatkan gabungan UMNO-DAP dalam kerajaan Madani sebagai lemah dan mudah tergugat. Beliau menegaskan Perikatan Nasional belum cuba menjatuhkan kerajaan tetapi yakin boleh membentuk kerajaan dengan majoriti rakyat pada pilihan raya akan datang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *