நான் சிறையில் இருந்தபோது மன்மோகன் சிங் செய்த உதவி நன்றிக்குரியது! - அன்வார் நெகிழ்ச்சி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 27: மறைந்த மன்மோகன் சிங்குக்கு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உணர்ச்சிபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 தான் சிறையில் இருந்தபோது தனது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கியதாகக் கூறினார்.

அவர் எனது குழந்தைகளுக்கு குறிப்பாக எனது மகன் இஹ்சானுக்கு உதவித்தொகை வழங்கினார் என்று அன்வார் தெரிவித்தார்.

அவரது இந்த செயல் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அன்வார் வர்ணித்தார்.

 உலகின் பொருளாதார ஜாம்பவான்களில் ஒருவர் என்பதோடு, இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி என்று அன்வார்  பாராட்டினார்.

1990களில் தாங்கள் இருவரும் நிதியமைச்சர்களாகப் பணியாற்றிய போது, ​​ நேரில் பார்க்கும் அரிய பாக்கியம் கிடைத்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *